திருத்தணி மாயமான சிறுமியின் வழக்கு.! காதலனின் கபட நாடகம்.!! அன்றே கூறியிருந்தால் எனது மகளை காப்பாற்றியிருக்கலாம்., கதறியழுத தந்தை.!!  - Seithipunal
Seithipunal


திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியை சார்ந்த 14 வயதுடைய சிறுமி தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தார். இவர் கடந்த 2018 வருடத்தில் செப்-7 ம் தேதியன்று பள்ளிக்கு சென்றார். பள்ளிக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பாததால்., அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவரை தேடி அலைந்தனர். 

பல இடங்களில் தனது மகளை தேடி அலைந்தும் காணாததால்., விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில்., அங்குள்ள கீச்சலம் கிராமத்திற்கு அருகில் இருக்கும் கருப்பு தோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மனித எலும்பு கூடுகளின் துண்டுகள் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., அங்கு ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் மனித எலும்பு கூட்டிற்கு அருகிலேயே பள்ளியின் சீருடை., புத்தகப்பை போன்ற பொருட்கள் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து இந்த தகவல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு., நேரில் வந்தவுடன் தீவிர விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

இந்த விசாரணையில்., அதே கிராமத்தை சார்ந்த சங்கரய்யா என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில்., அவர் அளித்த தகவலின் பேரில் கரும்பு தோட்ட உரிமையாளர் நாதமுனி., கிருஷ்ணமூர்த்தி., ஜெகதீஷ் மற்றும் மோகன் ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் ஐவரிடமும் மேற்கொண்ட தொடர் கிடுக்குப்புடி விசாரணையில்., மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த தகவலானது வெளிவந்தது. 

சங்கரய்யாவும்., 14 வயதுடைய சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். சங்கரய்யாவிற்கு அந்த பெண் முறைப்பெண் என்பதால் இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அந்த நேரத்தில்., இவர்கள் இருவரும் அடிக்கடி அங்குள்ள கரும்பு தோட்டத்தில் இருக்கும் அறையில் அழைத்து சென்று தனிமையில் இருந்து வந்துள்ளனர். 

அந்த சமயத்தில்., ஒரு நாள் கருப்பு தோட்டத்தில் இருக்கும் உரிமையாளர் நாதமுனி கண்டுவிடவே., உரிமையாளர் நாதமுனி மற்றும் அவரது கூட்டாளிகள் கிருஷ்ணமூர்த்தி., ஜெகதீஷ் மற்றும் மோகன் ராஜ் ஆகியோர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும்., மாணவியை இவர்கள் ஐவரும் சேர்ந்து சுமார் 5 நாட்கள் கொடுமையான முறையில் பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் கடுமையான நிலையில் இருந்த மாணவி மயக்கமடைந்தார். 

இதனையடுத்து மாணவியை ஐந்து நாட்கள் கொடூர முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு., சுயநினைவின்றி இருந்த நிலையில்., இரும்பு ராடல் அடித்து கொலை செய்துள்ளனர். மேலும்., இந்த விஷயம் தொடர்பாக வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்று கூறி மாணவியின் காதலர் சங்கரய்யாவிற்கு ரூ.5 ஆயிரம் பணம் வழங்கியுள்ளார். மாணவியின் உடலை அங்குள்ள ஓடை பகுதியில் புதைத்த பின்னர் எந்த விதமான பிரச்சனையும் நடைபெற்றது போலவே., சங்கரய்யா இருந்துள்ளார். 

அந்த பகுதியில் சுற்றி திருந்த நாய்கள் எலும்பை தேடி தோண்டியதை அடுத்து மாணவியின் எலும்பு கூடுதலானது வெளிவந்துள்ளது. இதனை கண்ட விவசாயி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த பின்னர்., காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த விசயமானது வெளிவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த காவல் துறை அதிகாரி., இந்த விசயமானது அனைத்து பெண்களுக்கும் படமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

இந்த விஷயம் குறித்து சிறுமியின் தந்தை சுப்பிரமணி தெரிவித்ததாவது., சங்கரய்யாவின் மீது ஏற்கனவே எங்களுக்கு சந்தேகம் இருந்தது. இது குறித்து எங்களின் குழந்தை காணாமல் போன அன்றில் இருந்தே அவர்கள் இல்லத்திற்கு சென்று சங்கரய்யாவிடம் கேட்டோம். அதற்கு சங்கரய்யா எனக்கு தெரியாது என்று கூறிவிட்டார். 

மேலும்., அவரது காலில் விழுந்து மன்றாடியும்., அவருக்கே திருமணம் செய்து வைப்பதாக கூறியும் எங்களிடம் எந்த விதமான உண்மையையும் கூறவில்லை. சங்கரய்யாவின் தந்தையும் அவர் நிச்சியம் வருவார் என்று ஆறுதல் கூறியதை அடுத்து திரும்பினோம். மகள் காணாமல் போன அன்றில் இருந்து அவரை தினமும் பார்க்கும் போதெல்லாம் கேட்ட சமயத்தில்., தெரியாது என்று கூறி வந்தார். 

கடைசியில் எனது மகளை எலும்புக்கூடாக கரும்பு தோட்டத்தில் தான் கண்டறிந்தோம்., எங்களின் மகளை நாசம் செய்த அவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள் என்று கண்ணீருடன் தெரிவித்தார். மேலும்., அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அடுத்தவருக்கு பாடமாக அமைய வேண்டும் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruthani school student missing case father says


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->