படிக்கும் போது கேடுகெட்ட சவகாசம்.. பெண்களிடம் அத்துமீறல்.. திருப்பூரில் பேரதிர்ச்சி.!!
in thirupur youngster sexual torture girls police arrest
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் பகுதியை சார்ந்தவர் சண்முகம். இவரது மனைவியின் பெயர் சம்பூரணம். இவர்கள் இருவரும் திருமணம் முடிந்து குழந்தையில்லை என்ற காரணத்தால்., வெங்கடலாசம் என்ற நபரை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.
இவரை தற்போது டிப்ளமோ வரை படிக்க வைத்துள்ள நிலையில்., சண்முகம் மற்றும் சம்பூரணம் ஆகியோர் அடுத்தடுத்து இயற்கையை எய்தியுள்ளனர். தற்போது 20 வயதாகும் வெங்கடாசலம் தனியாக இருந்து வந்துள்ளார்.
இவருக்கு அக்கம்பக்கத்தினர் சிறிது நாட்கள் உணவளித்து வந்த நிலையில்., இங்கிருக்கும் இளம்பெண்களிடம் திடீரென அத்துமீற முயன்றுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான பொதுமக்கள் தங்க அனுமதி அளிக்கவில்லை.
இதனால் அங்குள்ள ஈஸ்வரன் கோவில் பகுதியில் இருக்கும் வீட்டில் தங்கியிருந்த நிலையில்., இரண்டு வீடுகளும் வாடகைக்கு விடப்பட்டு இருந்ததால்., அவர்களிடம் தினமும் ரூ.50 வாங்கி கொண்டு அங்குள்ள பகுதிகளில் படுத்துறங்கி வந்துள்ளார்.
இந்த நேரத்தில்., இப்பகுதியில் உள்ள வீட்டில் இருந்த பெண்ணை திடீரென கட்டிபிடிக்கவே., இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில்., நேற்று மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த மாணவியிடம் அத்துமீறி நடத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வெங்கடாசலத்தை மீட்டனர். மேலும்., படிக்கும் காலத்தில் கெட்ட பழக்கமுடைய நபர்களின் சவகாசத்தின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்., இவரை கோயம்புத்தூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thirupur youngster sexual torture girls police arrest