விபத்தில் பலியான தொழிலாளியின் கண்ணீர் சோகம்..! பல்லடத்தில் அரங்கேறிய பெரும் துயரம்.!!
in thirupur workers died in accident police investigation going on
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகேயுள்ள நாரணாபுரம் பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் (வயது 24). இவர் விசைத்தறி தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இதே பகுதியில் உள்ள அம்மாபாளையம் பகுதியை சார்ந்தவர் அசோக் குமார் (வயது 29).
இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வரும் நிலையில்., அங்குள்ள அம்மாபாளையம் விசைத்தறி கூடத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று பல்லடம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று., நாரணாபுரம் நோக்கி வந்து கொண்டு இருந்த சமயத்தில்., மணிகண்டன் வாகனத்தை இயக்கியுள்ளார்.
இரு சக்கர வாகனம் அங்குள்ள பல்லடம் - மங்களம் சாலையில் வந்து கொண்டு இருந்த சமயத்தில், அரசங்காடு பகுதியில் எதிரே லாரியொன்று வந்து கொண்டு இருந்துள்ளது. லாரியின் அருகில் ஓரமாக இருவரும் சென்று கொண்டு இருந்த நிலையில்., லாரி வலது புறமாக சென்றுள்ளது.
லாரிக்கு அருகில் பயணம் செய்து கொண்டு இருந்த இருவரும் செய்வதறியாது திகைக்கவே., கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லாரியின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில் இருவரும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடியதை அடுத்து., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் மருத்துவமனைக்கு சென்றதும்., இவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., இருவரும் வரும் வழியில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும்., இந்த விபத்தில் பலியான மணிகண்டனிற்கு கடந்த வருடத்தில் திருமணம் முடிந்த நிலையில்., திவ்யா (வயது 20) என்ற மனைவியும்., ஏழு மாதமேயான பெண் குழந்தையும் உள்ளது.
இந்த தகவலை அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும்., இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thirupur workers died in accident police investigation going on