கள்ளக்காதலியை நடுரோட்டியில் வெட்டி கொலை செய்த கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்.. திருப்பூரில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் தொங்குட்டிபாளையம் பகுதியை சார்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி வேலுமணி (வயது 43). இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் புவனா என்ற 19 வயது மகளும், சந்திரபோஸ் என்ற 11 வயது மகனும் இருக்கின்றனர். 

இந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக காளிமுத்து இறந்துவிட்ட நிலையில், இவர்களது மகள் புவனாவுக்கு திருமணம் முடிந்துள்ளது. சந்திரபோஸ் அங்கு உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். தினமும் காலையில் 7 மணிக்கு வேலைக்கு செல்லும் முன்பாக தனது மகனை அந்த வழியாக வரும் அரசு பேருந்தில் பள்ளிக்கு ஏற்றி விடுவது வழக்கம். 

அதன்படி, நேற்று காலை தனது மகன் சந்திரபோஸை தொங்குட்டிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பள்ளிக்கு ஏற்றிவிட்டு, வீட்டிற்குச் செல்வதற்காக திரும்பியுள்ளார். பேருந்து நிறுத்ததிற்கு அருகே இதே ஊரைச் சார்ந்த நாச்சிமுத்து என்ற 60 வயதான நபர் வேலுமணி வழிமறித்து வாக்குவாதம் செய்துள்ளார். இந்த சமயத்தில், இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் கடுமையாக அதிகரித்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த நாச்சிமுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் வேலுமணியை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அலறியபடியே கீழே விழுந்த வேலுமணி மயக்கமடையவே, அக்கம்பக்கத்தினர் மீட்டு அனுப்பி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வேலுமணி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான தகவலை அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வேலுமணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த விசாரணையில், நாச்சிமுத்து வேலுமணியை கொலை செய்தது தெரியவந்தது. 

இதன் பின்னர் தனிப்படை அமைத்து நாச்சிமுத்துவை தேடி வந்த காவல் துறையினர், நேற்று மாலை நேரத்தில் கைது செய்தனர். பின்னர் நாச்சிமுத்துவிடம் மேற்கொண்ட விசாரணையில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக நாச்சிமுத்து அளித்த வாக்குமூலத்தில், கள்ளக்காதல் உறவால் கொலை அரங்கேறியது தெரியவந்துள்ளது. 

" எனது மனைவி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக இருந்து விட்டார். நான் தனிமையில் இருந்த சமயத்தில், எனக்கும் - வேலுமணிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு அவ்வப்போது செலவுக்கு பணம் கொடுத்து வந்தேன். சீட்டுக்கட்டு பணம் கொடுத்து வந்தேன். இந்த நிலையில், அவர் பணியாற்றி வரும் நிறுவனத்தில் மற்றொரு நபருடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. 

இதனை நான் கண்டித்தும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் கூறினேன். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, நிறுவனத்தில் பணியாற்றி வருபவருடன் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய முடிவு செய்து, அரிவாளை அங்குள்ள படிக்கல் பகுதியில் நன்றாக தீட்டிவிட்டு, பேருந்து நிறுத்தத்திற்கு வந்து மீண்டும் திருமணத்தை கேட்டேன். அவர் மறுப்பு தெரிவித்ததால் அங்கேயே கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirupur lady murder due to illegal affair


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->