கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை எண்ணி கணவன் எடுத்த இறுதி முடிவு.! தந்தையின் காலை பிடித்து கதறியழுத குழந்தைகள்.!!
in thirupur husband attempt suicide when his wife married her illegal affair boy
இந்த உலகில் பல விதமான பிரச்சனைகளில் பல தங்களின் உயிரை இழந்து வரும் நிலையில்., திருமணத்திற்கு பின்னர் கணவருடன் வாழ வேண்டிய வாழ்க்கையை., மோகம் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணி அரங்கேறும் முறையற்ற கள்ளகாதல் உறவுகளால் பல துயரமான தற்கொலைகள் மற்றும் கொலைகள் அரங்கேறி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் முத்தூர் தொட்டிபாளையத்தை சார்ந்தவர் ஜெகநாதன் (வயது 37). இவரது மனைவியின் பெயர் லட்சுமி. இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். லட்சுமி அங்குள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த சமயத்தில்., லட்சுமிக்கும் - அதே பகுதியை சார்ந்த வாலிபருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கமானது கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த தகவலானது ஜெகநாதனிற்கு தெரியவரவே இருவரையும் கண்டித்துள்ளார். இதனை அறிந்த கள்ளக்காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து சம்பவத்தன்று பணிக்கு சென்று வருவதாக கூறிய மனைவி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த ஜெகநாதன் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான ஜெகநாதன் தற்கொலை செய்துள்ளார். தந்தை தற்கொலை செய்ததை அறிந்த இரண்டு குழந்தைகளும் கதறியழுத காட்சியானது பெரும் துயரத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்த தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து., ஜெகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., இது குறித்த விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in thirupur husband attempt suicide when his wife married her illegal affair boy