14 வயது சிறுமியை நிர்கதியாய் ரோட்டில் தவிக்க விட்ட நாடகக்காதல் காமுகன்... திருப்பூரில் பேரதிர்ச்சி சம்பவம்.!!
in thirupur drama love child rescued in bus stand drama lover escapes
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி அருகேயுள்ள செம்பாகவுண்டம்பாளையம் கிராமத்தை சார்ந்த சிறுமி தேனு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சிறுமிக்கு 14 வயதாகும் நிலையில், அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.
அங்குள்ள நம்பியூர் அருகேயுள்ள எம்மாம்பூண்டி ராயர்பாளையம் பகுதியை சார்ந்தவர் சம்பூதத்தான். இவரது மகனின் பெயர் முத்துக்குமார் (வயது 22). இந்த நிலையில், முத்துக்குமாருக்கும் - தேனுவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில், காமுக எண்ணத்தை கொண்ட முத்துக்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டை விட்டு வெளியேறி வர வற்புறுத்தியுள்ளான்.
இவனது பேச்சை நம்பிய சிறுமி கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டை விட்டு வெளியேறி வரவே, இரவு சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளனர்.
சிறுமி எங்கு தேடியும் கிடைக்காததை அடுத்து, உறவினர்களின் முயற்சியுடன் சிறுமியை அங்குள்ள பவானிசாகர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்து மீட்டுள்ளனர். இதனையடுத்து சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்த சமயத்தில் முத்துக்குமார் தொடர்பான விஷயம் தெரியவந்துள்ளது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் முத்துக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thirupur drama love child rescued in bus stand drama lover escapes