11 வயது சிறுமியை சீரழித்த 52 வயது காம கொடூரன்.! திருப்பூரில் பெரும் சோகம்..!!
in thirupur child sexual harassment by 52 year old culprit
நாம் வாழும் உலகில் பல விதமான துயரங்கள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் துயரங்களில் நம்மை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் ஆகும். நமது நாட்டின் சட்டதிட்டங்கள் தொடர்ந்து கடுமையானால் மட்டுமே இது போன்ற செயல்களை குறைக்க இயலும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் சாலை பகுதியில் பெற்றோருடன் 11 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று வரும் வழக்கத்தை சிறுமியின் தந்தை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில்., நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் இருந்துள்ளார். இந்த சமயத்தில்., சிறுமி அதிக சோர்வுடன் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்., சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.
சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில் வசித்து வந்த சமையல் தொழிலாளியான வேலாயுதம் (வயது 52) என்பவன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததும்., கடந்த ஒரு வார காலமாகவே இதனை தொடர்ந்து செய்து வந்ததும்., இதனை யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதும் தெரியவந்தது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அங்குள்ள திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சமையல்காரன் காம கொடூரன் வேலாயுதத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thirupur child sexual harassment by 52 year old culprit