திருப்பூரில், குழந்தையை கடத்தி சென்ற வழக்கு விசாரணையில், பொதுமக்கள் உதவியால் கைதான பெண்.. பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகேயுள்ள அரசன்காடு பகுதியை சார்ந்தவர் மாரி (வயது 62). மாரியுடைய மனைவி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துவிட்ட நிலையில், இவரது மகன் சுடலை ராஜா மற்றும் இரண்டரை வயது பேத்தி மகாலட்சுமி ஆகியோருடன் மாரி வசித்து வந்துள்ளார். 

கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக மருமகள் இசக்கி, தனது கணவருடன் கொண்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து சென்றுவிட்ட நிலையில், மாரி மற்றும் சுடலைராஜா இப்பகுதியில் கார் வர்ணம் பூசும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், மாரி கடந்த வாரம் வியாழக்கிழமையன்று வேண்டுதலை நிறைவேற்ற பேத்தியுடன் பழனி முருகன்கோவிலுக்கு சென்றுள்ளார். 

முருகன் கோவிலில் வேண்டுதலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த வேலையில், பழனி பேருந்து நிலையத்தில் இருந்த 35 மதிக்கத்தக்க பெண்ணொருவர் பேச்சுக்கொடுத்து, தன்னை ஆதரவற்றவர் என்று கூறி, வீட்டில் அடைக்கலம் கொண்டுதான், வீட்டு வேலைகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து பெண் பார்ப்பதற்கு அழகாகவும், பேச்சில் கருணையும் கொண்டு இருந்ததால் பெயரை கூட கேட்காது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மேலும், இந்த நேரத்தில் சுடலை ராஜாவும் பணி விஷயமாக வெளியூருக்கு சென்றுவிட்டதால் மதுவை வாங்கி வந்து குடித்துவிட்டு, பெண்ணுடன் உல்லாசமாக இருந்து போதை மயக்கத்தில் உறங்கியுள்ளார்.

பின்னர் மாலை நேரத்தில் கண்விழித்து பார்த்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியாக பெண்ணும், குழந்தையும் காணவில்லை. இதனையடுத்து இருவரையும் அங்குள்ள பல பகுதிகளில் தேடியும் காணாததால் மகனிற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்த சுடலை ராஜா அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அங்குள்ள கண்காணிப்பு காமிராவை சோதனை செய்துள்ளனர். காவல் துறையினரின் சோதனையில் பெண் குழந்தையை அழைத்து கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக தனிப்படை அமைத்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் கடந்த 23 ஆம் தேதியன்று நடைபெற்ற நிலையில், தற்போது குழந்தையை மீட்டுள்ளனர். 

தனிப்படை காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இளம்பெண்ணொருவர் குழந்தையோடு ஈரோடு பேருந்து நிறுத்தத்தில் சுற்றி திரிவதாக பொதுமக்கள் பிடித்து வைத்து காவல் துறையினர்வசம் ஒப்படைத்தனர். இளம்பெண்ணிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவருடன் இருந்தது கடத்தப்பட்ட குழந்தை மகாலட்சுமி என்பது தெரியவந்தது.

இது தொடர்பான விசாரணையில், குழந்தையை கடத்திய பெண்மணியின் பெயர் அல்போன்ஸ் மேரி (வயது 30) என்பதும், இவர் சேலத்தை சார்ந்தவர் என்பதும் தெரியவந்தது. குழந்தையை கடத்தி மேரி வேளாங்கண்ணிக்கு சென்ற நிலையில், தந்தையை தேடி குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. பின்னர் மீண்டும் இவர் பல்லடத்திற்கு வருவதற்காக ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்த சமயத்தில் பொதுமக்களால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirupur child kidnapped police rescued now


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->