பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி அரங்கேறிய சோகம்.. 13 பேருக்கு நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு இன்று அதிகாலை நேரத்தில் அரசு பேருந்து புறப்பட்டு பயணம் செய்து கொண்டு இருந்தது. இந்த பேருந்தை செல்வராஜ் (வயது 45) என்பவர் இயக்கியுள்ளார். 

இந்த பேருந்தில் நடத்துனராக அன்னக்கொடி (வயது 53) என்பவர் இருந்துள்ளார். இந்த பேருந்தில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில்., பேருந்தானது அதிகாலை சுமார் 6 மணியளவில் தாராபுரம் புறவழிச்சாலை வழியாக சென்று கொண்டு இருந்துள்ளது. 

இந்த நேரத்தில்., தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு லாரி சென்று கொண்டு இருந்த நிலையில்., லாரியை மணிகண்டன் (வயது 27) என்பவர் இயக்கியுள்ளார். இந்த இரண்டு வாகனங்களும் அங்குள்ள ஐஸ்வர்யா நகர் அருகே வந்து கொண்டு இருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்திக்குள்ளாகியுள்ளது.

accident, accident images,

இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் செல்வராஜ் மற்றும் லாரியின் ஓட்டுநர் அன்னக்கொடி உட்பட 13 பேர் பரிதாபமாக படுகாயமடைந்து உதவிக்காக அலறி துடித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirupur bus accident peoples injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->