ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்த முயன்ற 62 வயது கொடூரன்.! திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்.!!
in thirupur 6 year child sexual harassment by 62 year old man
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே நடைபெற்று வருகிறது. பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி., வேலைக்கு சென்று சமயங்களில் கூட பல விதமான தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில்., பல இடங்களில் தொடர்ந்து குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பிரச்சனையானது பெரும் அதிர்வலையை நம்மிடையே பதிவு செய்கிறது. 62 வயதான முதியவன் ஒருவன் ஆறு வயது குழந்தையிடம் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர் பகுதியை சார்ந்தவன் ஜெயபாலன் (வயது 62). இவன் வர்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவனது வீட்டருகே ஆறுவயதுடைய குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தது.
இந்த குழந்தையை கண்ட காம கொடூரன்., சிறுமியை அங்கிருந்து தூக்கி சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளான். இதனால் பதறிப்போன குழந்தை கதறியளவே., சிறுமியை காணாது தேடிய பெற்றோர்கள் சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு குழந்தையை மீட்டனர். பின்னர் குழந்தை தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறியழுதார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொடூரன் ஜெயபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thirupur 6 year child sexual harassment by 62 year old man