மருத்துவரிடம் போனில் கேட்டு பிரசவம் பார்த்த நர்சுகள்.. துடிதுடித்து உயிரிழந்த இளம்பெண்... திருப்பத்தூர் மருத்துவமனையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆரிப் நகர் பகுதியை சார்ந்தவர் இம்ரான் (வயது 30). இவரது மனைவியின் பெயர் பரீதா (வயது 25). பரீதா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த 21 ஆம் தேதியன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் பிரசவத்திற்காக அங்குள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டதை அடுத்து, இவருக்கு ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.  

குழந்தையை பிரசவித்த பரீதா சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மருத்துவர்கள் மற்றும் நர்ஸுகள் உரிய சிகிச்சை அளிக்காததால் பரீதா உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த தகவலை அறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பரீதாவின் குடும்பத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து, பரீதாவின் குடும்பத்தினர் அவரது உடலை பெற்று அங்கிருந்து சென்றனர். 

இதனைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் கடந்த 2 நாட்களாக மேற்கொண்ட விசாரணையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரீதா பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்ட நேரத்தில் மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்பதும், நர்ஸ்கள் பரீதாவிற்கு பிரசவம் பார்த்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், பிரசவம் பார்க்கும் நேரத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, மருத்துவருக்கு தொடர்பு கொண்டு பிரசவமும் பார்த்துள்ளனர்.  

மேலும், குழந்தை பிறந்த பின்னர் பரீதாவிற்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்படாது இருந்த நிலையில், பரீதவை அப்படியே விட்டுவிட்டு நர்ஸுகள் வெளியே சென்ற நேரத்தில் பரீதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் விசாரணை செய்த அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirupathur pregnant girl died due to nurse treatment during delivery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->