காதல் திருமணம்.. 5 மாத கர்ப்பிணியாக பெண்.. உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகரம் அண்ணாநகர் காலனி பகுதியை சார்ந்தவர் தீபா (வயது 25). இவரது கணவரின் பெயர் ராகுல். இவர் தனியார் தொலைக்காட்சி விற்பனை மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரின் காதலையும் பெற்றோரிடம் தெரியப்படுத்தவே, இருவரின் பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து இருவரும் வீட்டினை விட்டு வெளியேறி கடந்த சில மாதத்திற்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன்பின் அங்குள்ள ரங்கநாதன் தெரு பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார்.இந்த நிலையில், 5 மாத கர்ப்பிணியாக தீபா இருக்கும் நிலையில், திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்துள்ளார். இவரது அலறல் சப்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து வந்த அக்கம் பக்கத்தினர், இவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மருத்துவமனையில் இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து, இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில், தீபாவுடைய அலைபேசியை சோதனை செய்ததில் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ காட்சியை பதிவு செய்துள்ளார். எதற்க்காக இந்த விடியோவை பதிவு செய்தார் என்பது தெரியவராத நிலையில், காதல் திருமணம் செய்து கொண்ட கர்ப்பிணி பெண் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Thirupathur girl suicide attempt record live police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->