பொங்கல் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் பரிதாப பலி.. திருப்பத்தூரில் பெரும் சோகம்.!!
in thirupathur child died police investigation
திருப்பத்தூர் மாவட்டத்திலிருக்கும் நாட்டறம்பள்ளியை அடுத்த அம்மனாங்கோயில் என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரியா- சுரேஷ் தம்பதிகளுக்கு தனுஷ் ஸ்ரீ, ஜெயஸ்ரீ என்ற இரு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று சாமிக்கு பொங்கல் படையலிட்டு அந்தப் பொங்கலை தங்களுடைய குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். பொங்கலை சாப்பிட்ட சற்று நேரத்திலேயே இரு குழந்தைகளும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தன.
உடனடியாக குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் வரும் வழியிலேயே உயிர் இழந்து விட்டது என்று தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து உடற்கூறு ஆய்விற்காக குழந்தைகளின் உடலானது அனுப்பப்பட்ட இருக்கின்றது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் பொங்கல் சாப்பிட்டதால் தான் உயிர் இழந்தனவா அல்லது பல்லி ஏதேனும் விழுந்து உள்ளதா.? விஷம் கலக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
பொங்கல் தினத்தில் இரு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thirupathur child died police investigation