ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை..! திருநெல்வேலியில் அரங்கேறிய பயங்கர சம்பவத்தின் பின்னணி தகவல்.!!
in thirunelveli man murder police investigation going on
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழையபேட்டை அருகேயுள்ள கரையடி பச்சேரி பகுதியை சார்ந்தவர் சகாதேவன். இவரது மகனின் பெயர் இசக்கி முத்து என்கிற கணேஷ் பாண்டியன் (வயது 26).
கணேஷ் பாண்டியன் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., கணேஷின் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும்., ஸ்ரீவைகுண்டத்தில் வைத்து கணேஷ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்., இக்கொலையில் இசக்கிமுத்துவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில்., இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நேரத்தில்., இன்று காலை வீட்டில் இருந்த இசக்கிமுத்து வெளியே சென்றுள்ளார்.
இவரை பின்தொடர்ந்த மர்ம கும்பலொன்று வழிமறித்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதத்தால் தொடர்ந்து தாக்கவே., அதிர்ச்சியடைந்த இசக்கி முத்து சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடவே., இவரை இடைவிடாது துரத்திய மர்ம கும்பல் திருநெல்வேலி - தென்காசி சாலையில் ஓடவிட்டு வெட்டி கொலை செய்தனர்.
இரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் துடிதுடிக்க படுகொலை அரங்கேறிய நிலையில்., இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான பொதுமக்கள் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இசக்கிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thirunelveli man murder police investigation going on