திருமணம் முடிந்த ஆறுமாதம்..! உறவினரின் சுபநிகழ்ச்சியில் பெரும் சோகம்.!! கண்ணீரில் கிராமம்.!!
in thirunelveli man died in accident
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி செல்வ விநாயகர் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகனின் பெயர் முத்துக்குமார் (வயது 29). முத்துக்குமாருக்கு திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகும் நிலையில்., புளியங்குடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள அலைபேசி கடையின் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவரும் - இவரது நண்பரான செல்வகுமாரும் தேவிபட்டினத்தில் நடைபெற்ற உறவினரின் இல்லத் திருமண விழாவிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று மீண்டும் மாலையில் திரும்பிக்கொண்டு உள்ளனர். இந்த சமயத்தில்., வாசுதேவநல்லூரில் உள்ள சாலையில் வந்து கொண்டு இருந்துள்ளனர்.
வாசுதேவநல்லூரில் இதே பகுதியை சார்ந்த ராமர் (வயது 50) என்பவர் தனது மிதிவண்டியில் எதிர்பாராத விதமாக குறுக்கே வந்ததை அடுத்து., இவரின் மீது மோதாமல் இருப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் கைகொடுக்காமல்., சைக்கிளில் மோதியதை அடுத்து முத்துக்குமார் பலத்த காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிவகிரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில்., செல்லும் வழியிலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். செல்வகுமார் மற்றும் இராமருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில்., இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முத்துக்குமாரின் இறப்பு செய்தியானது அங்குள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thirunelveli man died in accident