சேலத்தில் பெண்ணை கடத்தி., திருநெல்வேலியில் விபச்சாரத்திற்கு உட்படுத்திய கொடூரம்.! விசாரணையில் பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் அருகேயுள்ள கருங்குளம் பீடி காலனி பகுதியில்., கடந்த சில நாட்களாகவே வெளி ஆட்களின் நடமாட்டம்., இரவு நேரத்தில் இருப்பதை அங்குள்ள மக்கள் கண்காணித்துள்ளனர். இதனையடுத்து இது குறித்த தகவலை அங்குள்ள மக்கள் காவல் துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளார். 

இதனை அறிந்த காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில்., அங்குள்ள இல்லம் ஒன்றில் விபச்சார தொழில் நடைபெற்று வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இல்லத்திற்குள் காவல் துறையினர் அதிரடியாக விரைந்ததை அடுத்து., சம்பவ இடத்தில் இருந்த சிலர் தப்பியோடியுள்ளனர். மேலும்., அங்கிருந்த பிற நபர்களை சுற்றி வளைத்த காவல் துறையினர் கைது செய்தனர். 

பாலியல் வன்கொடுமை, sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இல்லத்தில் பாலியல் தொழிலாளியாக இருந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., சம்பந்தப்பட்ட பெண் சேலத்தை சார்ந்தவர் என்பதும்., இவருடைய வயது 30 என்பதும்., இவரிடம் ஏமாற்றி வேலை வாங்கி தருவதாக கூறி., திருநெல்வேலிக்கு அழைத்து வந்து விபச்சாரத்திற்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தியது தெரியவந்தது. 

இதனைத்தொடர்ந்து பெண்ணை மீட்ட காவல் துறையினர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில்., விபச்சாரத்தை அரங்கேற்ற வீட்டில் இருந்த கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியம்., மைதீன்., காதர்., ராஜப்பா ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., இதில் முக்கிய குற்றவாளியான கடா காஜாவை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirunelveli girl kidnapped and forced to prostitution


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->