மாணவியிடம் அத்துமீற முயன்ற 52 வயது ஆசிரியர்.! மாணவியின் துணிகர முடிவால் கதறிய ஆசிரியர்.!!  - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் அரசு உதவி பெரும் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அங்குள்ள சுற்றுவட்டார பகுதியை சார்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 

இதுமட்டுமல்லாது வெளியூரை சார்ந்த மாணவ - மாணவியர்கள் தனியார் விடுதிகளில் தங்கியிருந்து பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் நாகர்கோவிலை சார்ந்த டேவிட் (வயது 52) என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

இவர் அங்குள்ள வள்ளியூருக்கு அருகில் இருக்கும் லுத்தா நகரில் வசித்து வரும் நிலையில்., பள்ளியில் பயின்று வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார். 

டேவிட் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் கொடுத்து வந்த நிலையில்., மாணவி தனது எதிர்காலம் கருதி அவரை விட்டு விலகியே வந்துள்ளார். இந்த சம்பவத்தை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்திய டேவிட்., மாணவியிடம் அத்துமீற முயன்றுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி விஷயம் குறித்து திருநெல்வேலி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இவரின் தகவலை அறிந்த அதிகாரிகள் உடனடியாக இரகசிய விசாரணையை மேற்கொள்ள துவங்கினர். 

அந்த விசாரணையில் மாணவிக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் அளித்து வந்ததை டேவிட் ஒப்புக்கொண்டதை அடுத்து., அவனை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி., பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirunelveli girl complaint her school teacher sexual harassment privately


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->