அதிரடியாக உயர்ந்தது திருநெல்வேலியின் பிரதான அணைகள்...! கொண்டாட்டத்தில் விவசாயிகள்..!!
in thirunelveli district dams are filled
தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வந்தது. இந்த நிலையில்., கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில்., கடந்த இரண்டு நாட்களாக மழையின் அளவு குறைய துவங்கிய நிலையில்., இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யாததால்., அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணைக்கு வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில்., இன்று காலை நிலவரப்படி சுமார் 1523 கன அடி நீராக குறைந்தது.
கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று சற்று அதிகமான நேரத்தில் உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சுமார் 95 அடியாக இருந்த நீர்மட்டம்., ஒரேநாளில் 2 அடி உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி 97.30 அடியாக உள்ள நிலையில்., நாளை மற்றும் நாளை மறுநாளில் நீர்மட்டத்தை அளவு 100 அடியை எளிதில் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைப்போன்று அங்குள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம் 128.93 அடியாக இருந்த நிலையில்., எந்த விதமான மாற்றமும் இல்லாமல் நீர்மட்டம் உள்ளது. மணிமுத்தாறு அணையானது நீரின் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து 59.80 அடியாக உள்ளது. அங்குள்ள குண்டாறு., கொடுமுடியாறு அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளது.
கடனாநதியின் நீர்மட்டம் சுமார் 64.20 அடியாகவும்., இராமநதியின் நீர்மட்டம் சுமார் 73 அடியாகவும்., கருப்பாநதியின் நீர்மட்டம் சுமார் 68.96 அடியாகவும்., அடவி நயினார் அணையின் நீர்மட்டம் சுமார் 115 அடியாகவும் உள்ளது. மேலும்., நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் குண்டாரில் 25 மிமீ மழையும்., செங்கோட்டையில் 17 மிமீ மழையும்., அடவி நயினாரில் 7 மிமீ மழையும்., ஆய்குடியில் 2.4 மிமீ மழையும்., பாபநாசத்தில் 1 மிமீ மழையும்., சேர்வலாரில் 1 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thirunelveli district dams are filled