திருமணம் செய்யாமலே குழந்தையை பெற்றெடுத்த மாணவி.! மாணவியின் பெற்றோரின் எண்ணத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தை?.!
in thirunelveli cute baby died by parent torture due to before marriage delivery baby
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கை அருகில் உள்ள கிராமத்தைச் சார்ந்த இளம்பெண்., அங்குள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படிப்பு பயின்று வந்தார். அந்த சமயத்தில்., அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரின் மகனுக்கும் - இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்த நிலையில்., அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில்., மாணவி திடீரென கர்ப்பமடைந்துள்ளார். இந்த நேரத்தில்., மாணவியின் காதலன் பணிச்சூழல் காரணமாக வெளிநாட்டிற்கு சென்று விடவே மாணவியின் கர்ப்பமானது அவர்களது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
மாணவியின் கர்ப்பத்தை அறிந்த பெற்றோர் இது குறித்து அவரிடம் விசாரித்த சமயத்தில்., தங்களின் காதல் மற்றும் அதற்கு அடுத்த உறவை கூறவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் கூடி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து வாலிபரை வெளிநாட்டில் பணியை தவிர்த்து விட்டு ஊருக்கு வர சொல்லி தொடர்பு கொள்ளவே., ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் காரணத்தால் இந்த சமயத்தில் வர இயலாது., நான் வரும் சமயத்தில் மாணவியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் மாணவிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டு வலியால் அலறி துடித்த நிலையில்., அங்குள்ள மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மாணவிக்கு அங்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு முன்னதாகவே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய பெற்றோர்., குழந்தையை அங்கு உள்ள ஆசிரமத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
அங்குள்ள ஆசிரமத்திற்கு குழந்தையை எடுத்துச் சென்றிருந்த சமயத்தில்., குழந்தையைக் கண்ட ஆசிரம நிர்வாகிகள் குழந்தை பசியால் உயிருக்குப் போராடிக் கொண்டே இருக்கிறது., இதன் காரணமாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்து விடுங்கள் என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்து சென்ற நிலையில்., குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலானது காவல்துறையினர் தெரியவரவே., இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in thirunelveli cute baby died by parent torture due to before marriage delivery baby