நொடிப்பொழுதில் அரங்கேறிய விபத்து..! துடிதுடித்து உயிரிழந்த பெண்மணி..!!
in thirunelveli bus accident woman died police investigation going on
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துக்கொண்டு வருகின்றனர். இக்கிராமத்தில் இருந்து தென்காசி மற்றும் இராசபாளையம் செல்வதற்கு பேருந்து வசதியானது உள்ளது. மேலும்., தென்காசி - மதுரை முக்கிய சாலை என்பதால் எந்த நேரத்திலும் பேருந்து வசதி இருந்துகொண்டே இருக்கும்.
இந்த நிலையில்., இந்த ஊரில் உள்ள மக்கள் தென்காசி செல்லும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தனர். இந்த சமயத்தில் அவ்வழியாக வந்த காவல்துறை பாதுகாப்பு பேருந்து வேகமாக வந்த நிலையில்., பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வந்த சமயத்தில் எதிர்ப்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகளின் மீது பேருந்து மோதவே., கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும்., நான்கு பயணிகள் படுகாயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து காயமடைந்த பயணிகளை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்., இந்த விஷயம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர்., உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., அவர் யார்? எந்த ஊரை சார்ந்தவர்? என்பது தொடர்பான விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thirunelveli bus accident woman died police investigation going on