தின்பண்டம் வாங்க சென்ற 9 வயது சிறுமிக்கு அரங்கேறிய பெரும் துயரம்.! காம கொடூரனால் துடிதுடித்த சோகம்.!!
in thirunelveli a child have a sexual harassment
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் பல அநீதிகளுக்கு மத்தியில் பெண்கள் பல போராட்டங்களை கடந்து வாழ்ந்து வருகின்றனர். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பெரும்பாலும் நன்கு தெரிந்த நபர்களாலேயே அதிகளவு வழங்கப்பட்டு வருகிறது.
பலவிதமான சூழ்நிலைக்கு மத்தியில் தான் பெண்கள் பணிக்கும் சென்று., பள்ளி மற்றும் கல்லூரிகளில் சென்று பயின்று வருகின்றனர். இந்த நிலையில்., கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியலை அடுத்துள்ள ஆளூர் பகுதியை சார்ந்த 9 வயதுடைய சிறுமி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பனங்குடியில் இருக்கும் தனது உறவினர் இல்லத்திற்கு சென்று இருந்தார்.
அந்த சமயத்தில் சிறுமிக்கு தின்பண்டம் சாப்பிட வேண்டும் என்ற ஆவலானது வந்துள்ளது. தின்பண்டம் வாங்குவதற்காக வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்ற சமயத்தில்., கடையில் இருந்து தின்பண்டம் வாங்கிவிட்டு வரும் நேரத்தில் சிறுமி அழுது கொண்டு வந்துள்ளார்.
சிறுமி அழுது கொண்டே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியிடம் என்ன ஆனது என்று கேட்கவே., சிறுமிக்கு வாலிபர் ஒருவரின் மூலம் பாலியல் தொல்லை வழங்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in thirunelveli a child have a sexual harassment