நாடக காம கள்ளகாதலால் சிதைந்த குடும்பம்.! மகளை பார்க்க ஆளில்லாததால் விண்ணுலகிற்கு உடன் அழைத்து சென்ற தந்தை.!!
in thirumanglaam father attempt suicide due to her wife illegal affair
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் தோப்பூர் அருகேயுள்ள பகுதியை சார்ந்த தந்தை மற்றும் அவருடைய 9 வயது மகள் இருவரும் வயல்வெளியில் விஷமருந்திய நிலையில் தற்கொலை செய்துள்ளார். இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் அங்கு சென்றதால் யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில்., காலையில் அவ்வழியே சென்ற நபர்கள் இருவரின் உடலை கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத மற்பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., உயிரிழந்த நபரின் பையில் அவருடைய ஓட்டுநர் உரிமம் இருப்பதை காவல் துறையினர் கண்டுள்ளனர். இதனை கண்ட காவல் துறையினர் சோதனை செய்ததில்., கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சிக்கதாசன்பாளையத்தை சார்ந்த கிருபாகரன் என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில்., காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., தற்கொலை செய்து கொண்ட கிருபாகரன் (வயது 41) என்பதும்., இவரது மனைவியின் பெயர் செவிலியர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., இவர்களுக்கு ஒன்பது வயதுடைய ஜூலி என்ற மகள் உள்ளார்.
இவர்கள் இருவரின் வாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக சென்றுகொண்டு இருந்த நேரத்தில்., கிருபாகரனின் மனைவிக்கு மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியதை அடுத்து., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த தகவலானது கிருபாகரனுக்கு தெரியவரவே., இவர்கள் இருவரும் சண்டையிட்டுள்ளனர்.
இவர்களின் சண்டையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்லவே., கணவரிடம் விவாகரத்து பெற்ற மனைவி அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுள்ளார். தனது மகளுடன் தான் வாழ வேண்டும் என்று மகளின் மீது அதீத பாசம் கொண்ட தந்தை., மீண்டும் மனைவியை தன்னுடன் வந்து வாழும் படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் தாயாரை நினைத்து மகள் தினமும் அம்மா அப்பா என்று தன்னை வருத்திக்கொள்ள துவங்கியதை அறிந்த கிருபாகரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக கிருபாகரன் கோயம்புத்தூரில் இருந்து மதுரைக்கு கிளம்பி வந்ததை அடுத்து., திருமங்கலம் தோப்பூரில் உள்ள வயல்வெளி பகுதியில் தற்கொலை செய்துள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு முன்னதாக கிருபாகரன் கடிதமும் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அந்த கடிதத்தில்., என்னால் எத்துனை காலங்கள் தாக்குப்பிடிக்க இயலுமோ நான் தாக்கு பிடித்துவிட்டேன். இதற்கு மேல் என்னால் முடியாது. எனது உயிரை இழக்க விரும்பிய நான்., எனது மகளை எண்ணி வருந்தி அவளையும் உடன் அழைத்து செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news
Today News in Tamil
English Summary
in thirumanglaam father attempt suicide due to her wife illegal affair