கள்ளக்காதலிக்கு மற்றொரு தொடர்பு.. ஆத்திரமடைந்த காவலர் களேபரம்..!! தென்காசியில் பரபரப்பு.!!
in thenkasi illegal affair police attack girl investigation going on
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்கு கடையம் பகுதியை சார்ந்தவர் ஹரிராம். இவரது மனைவியின் பெயர் முப்பிடாதி சக்தி. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து சில வருடங்கள் ஆகிறது.
கடையம் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரி தட்க்ஷிணா மூர்த்தி என்பவருக்கும் - முப்பிடாதி சக்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலை மாறியுள்ளது. கள்ளகாதலர்கள் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த கள்ளக்காதல் உறவை அறிந்த ஹரிராம் தனது மனைவியை பிரிந்து சென்ற நிலையில்., அவ்வப்போது முப்பிடாதியின் இல்லத்திற்கு காவல் அதிகாரி தட்க்ஷிணா மூர்த்தி வந்து சென்று., மாதம் தோறும் குடும்ப செலவுக்காக பணம் வழங்கி வந்துள்ளார்.
இந்த சமயத்தில்., முப்பிடாதிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்படவே., இதனை அறிந்த காவல் அதிகாரி தட்க்ஷிணா மூர்த்தி கள்ளக்காதலி முப்பிடாதியை கண்டித்துள்ள நிலையில்., இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் வாக்குவாதமானது தகராறாக மாறவே., ஆத்திரமடைந்த காவல் அதிகாரி தட்க்ஷிணா மூர்த்தி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி தலையில் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.
படுகாயமடைந்த முப்பிடாதி வலியால் துடித்து அலறவே., அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., தப்பி சென்ற காவல் அதிகாரி தட்க்ஷிணா மூர்த்தி கடையம் காவல் நிலையத்திலேயே சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thenkasi illegal affair police attack girl investigation going on