மகனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தது ஏன்?... தாயாரின் பரபரப்பு வாக்குமூலம்.!!
in theni mother killed son police investigation
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் இருக்கும் சுருளிப்பட்டி சாலை அருகேயுள்ள தோட்டமன்துறை - முல்லைப்பெரியாறு செல்லும் பகுதியில் சாக்குமூட்டையில் வாலிபரின் தலை, கை மற்றும் கால்கள் இல்லாமல் இருந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த சடலத்தை பெண்ணொருவரும் - வாலிபரும் சாக்குமூட்டையில் கொண்டு வந்து வீசி சென்றது தெரியவந்துள்ளது. இதன்பின்னர் அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில், அங்குள்ள நந்தகோபாலன் தெருப்பகுதியை சார்ந்த ராஜா என்பவரின் மனைவி செல்வி (வயது 49) என்பதும், இவருடன் வந்தது இவரது இரண்டாவது மகன் விஜய பிரசாத் (வயது 25) என்பதும் தெரியவந்துள்ளது.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்டு, கொலைக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலில், செல்வியின் கணவர் ராஜா கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்த நிலையில், செல்வியின் இரண்டு மகன்கள் விக்னேஸ்வரன் (வயது 30) மற்றும் விஜயப்ரசாத் (வயது 25) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
விக்னேஸ்வரன் பொறியியல் பட்டதாரியாக இருந்து வரும் நிலையில், கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் போதை பழக்கத்திற்கு அடிமையானதன் காரணமாக கல்லூரியில் இருந்து இரண்டு முறை இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இதன்பின்னர் தனது தேவை மற்றும் போதை பழக்கத்திற்கு திருட்டு தொழிலுக்கு சென்று வந்துள்ளார்.
இதுமட்டுமல்லாது தவறான நபர்களின் சேர்க்கையால் வாழ்க்கை தடம் புறண்டுள்ளது. இதன்பின்னர் தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினரும் தங்களின் பேச்சுவார்த்தையை குறைக்கவே, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விக்னேஸ்வரனின் தம்பி காதல் திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரே இல்லத்தில் வசித்து வந்த நிலையில், தனக்கு திருமணம் ஆகாத சூழ்நிலையில் தம்பி திருமணம் செய்து கொண்டுள்ளது அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தம்பி மற்றும் தாயாரிடம் தகராறில் ஈடுபடவே, விஜய பிரசாத்தின் மனைவி நிம்மதியில்லாத வாழ்க்கையோ? என்று எண்ணி அவரது தாயாரின் இல்லத்திற்க்கே மீண்டும் சென்றுள்ளார். இதனையடுத்து தனது மகனை கொலை செய்ய செல்வி திட்டமிடவே, போதையில் சம்பவத்தன்று இல்லத்திற்கு வந்த விக்னேஸ்வரனிற்கு சாப்பாடு கொடுத்து உணவில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.
பின்னர் மனதை கல்லாக்கி மகனை துண்டு துண்டாக உடல் பாகங்களை வெட்டியெடுத்து, உடலை சாக்குப்பையில் போட்டு உடலை தொட்டமன் துறை பகுதியிலும், தலையை வீரப்பநாயக்கன்குளம் அருகேயுள்ள கிணற்றிலும், கை மற்றும் கால்களை காந்தி நகர் பகுதியில் உள்ள ஓடையிலும் கிணற்றிலும் வீசியுள்ளார். உடல் பாகங்களை தற்போது காவல் துறையினர் மீட்டுள்ளனர். மேலும், கை கால்கள் மட்டும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in theni mother killed son police investigation