அடுத்த வேளை உணவிற்கு கூட வழியில்லாமல், 3 மகளுடன் தாயார் எடுத்த பெரும் சோக முடிவு.! தேனியை உலுக்கிய சோகம்.!!
in theni mother and 3 daughters attempt suicide due to economically poor
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள போடி எஸ்.எஸ்.புரம் பகுதியை சார்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவியின் பெயர் லட்சுமி (வயது 36). இவரது மகளின் பெயர் அனுசுயா (வயது 19)., ஐஸ்வர்யா (வயது 15)., அட்சயா (வயது 10). இவர்கள் அனைவரும் மகிழ்வாக வாழ்ந்து வந்த நிலையில்., கடந்த சில வருடத்திற்கு முன்னதாக பால்பாண்டி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தனது மகள்களின் எதிர்காலம் கருதி., அப்பகுதியில் கூலித் தொழில் செய்து மகள்களை கவனித்து வந்துள்ளார். இந்த தருணத்தில்., மகளின் படிப்பிற்கு போதிய பணம் இல்லாமல் தவித்து வந்த நிலையில்., அடுத்த வேளை உணவிற்கு கூட பணம் தட்டுப்பாடான நிலையில்., பால்பாண்டியின் உறவினர்கள் கூட இவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்ட லட்சுமி., தனது மகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதன்படி அனைவரும் வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடந்த நிலையில்., இவர்களின் முனங்கல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து வீட்டிற்குள் அனைவரும் விரைந்ததை அடுத்து., அனைவரும் விஷமருந்தியது தெரியவந்துள்ளது.
இதனைக்கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான அக்கம் பக்கத்தினர்., அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் அனுப்பி வைத்தனர். இந்த தருணத்தில்., மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அனுசுயா மற்றும் ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., லட்சுமி மற்றும் அட்சயா உயிருக்கு ஆபத்தாக மருத்துவமனையில் உள்ளனர்.
இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்., தகவலை அறிந்ததும் மருத்துவமனைக்கு விரைந்து., லட்சுமி மற்றும் அட்சயாவிற்கு சிகிச்சை அழிக்கப்படுவதை உறுதி செய்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., குடும்ப வறுமையால் பெண் குழந்தைகளுடன் தாயார் தற்கொலை முடிவு செய்தது., அப்பகுதியில் மட்டுமல்லாது தமிழகத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in theni mother and 3 daughters attempt suicide due to economically poor