தேனி மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்.! மருத்துவ சோதனையில் வெளியான பகீர் தகவல்.!!
in theni mentally affected child rapped by vidyasala owner
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்களை குறைப்பதற்கு சட்டங்கள் கடுமையாகும் பட்சத்திலேயே., பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.
மேலும்., சிறுமிகளாக இருக்கும் பெண்களை நாடக காதலால் ஏமாற்றி சீரழிக்கும் கொடூரம் நடந்து வரும் நிலையில்., மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள அரண்மனைப்புதூர் அருகேயுள்ள தன்வந்திரி வைத்திய சாலையில்., வானவில் மறுவாழ்வு மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 15 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மையத்தில் இருந்த ஏழு வயதுடைய சிறுமி கடந்த நான்கு வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சமயத்தில்., சிறுமியின் உடல் நலமானது கடந்த 19 ஆம் தேதி குன்றி இருப்பதை பெற்றோர்கள் அறிந்துள்ளனர். மேலும்., உடலில் ஆங்காங்கே காயங்களும் இருந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த சமயத்தில்., சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த பெற்றோர்கள் மறுவாழ்வு மையம் நடத்தி வந்த சரவணன் என்பவரின் மீது பிகுர் அளித்தும் காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை.
இத்னால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் பெண்ணின் உறவினர்கள் அங்குள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டதை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சரவணனின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in theni mentally affected child rapped by vidyasala owner