மகனின் கள்ளகாதலால் தாயாருக்கு நேர்ந்த சோகம்.! தேனியில் பெரும் துயரம்.!!
In theni illegal affair mother attempt suicide and died police investigation on going
முறையற்ற உறவு பிரச்சனை மற்றும் கள்ளக்காதல் தொடர்பான பிரச்சனைகள் இன்றளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் தொடர்ந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் அருகேயுள்ள தம்மிநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்தவர் பத்மாவதி (வயது 50). இவரது கணவரின் பெயர் சேகர். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில்., கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக ஒரு மகனிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த மகனிற்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்த காரணத்தால்., அவர் தனது கள்ளகாதலியுடன் மாயமாகவே., பெண் வீட்டு தரப்பில் பத்மாவதியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதனால் கடுமையான மன விரக்தியில் இருந்து வந்த பத்மாவதி அங்குள்ள சாலையோர மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., பத்மாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
In theni illegal affair mother attempt suicide and died police investigation on going