பணிக்கு சென்ற இடத்தில் பெண்ணை தேடியதால் அரங்கேறிய சோகம்.!! துடிதுடிக்க அரங்கேறிய வெறித்தன சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அருகேயுள்ள ஓடைப்பட்டி பகுதியை சார்ந்தவர் திருப்பதி (வயது 48). இவரது மனைவியின் பெயர் முருகேஸ்வரி (வயது 38). திருப்பதி கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக கொடைக்கானல் பகுதியில் இருக்கும் பேத்துப்பாறையில் விவசாயியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நேரத்தில்., கூம்பூர் வயல் பகுதியை சார்ந்த தாஸ் என்பவரின் மனைவி ஜான்சிராணி (வயது 40) வீட்டில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்துள்ளார். 

இந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் கள்ளகாதலானது மலர்ந்துள்ளது. மேலும்., கடந்த 3 மாதங்களாக கணவர் தன்னுடன் பேசாமல் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த முருகேஸ்வரி கொடைகானலிற்க்கு நேரடியாக வந்து தேடியலைந்துள்ளார். கணவர் இல்லாததால் சந்தேகமடைந்த முருகேஸ்வரி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் திருப்பதி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான விசாரணையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெள்ளப்பாறை பகுதியில் முருகன் என்பவரின் காரொன்று தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறி முருகனின் தம்பி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., மணிகண்டன் தலைமறைவாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து தனிப்படை அமைத்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மணிகண்டன் ரகசிய இடத்தில் இருப்பதை அறிந்த காவல் துறையினர் கைது செய்தனர். 

crime, crime images,

இது தொடர்பான விசாரணையில்., மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில்., ஜான்சி ராணியின் தங்கை சாந்தி (வயது 36) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. மேலும்., சாந்தி திருமணம் முடிந்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து கேட்டு தனது அக்காவின் இல்லத்திலேயே வசித்து வந்துள்ளார். இதனை திருப்பதி கண்டித்த நிலையில்., திருப்பதிக்கும் - மணிகண்டனிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்., சம்பவத்தன்று கள்ளக்காதலி சாந்தி., அக்கா ஜான்சிராணி மற்றும் நண்பர்கள் உதவியுடன் கொலை அரங்கேறியுள்ளது. 

பெருமாள்மலை பகுதியை சார்ந்த நாகராஜ் (வயது 23)., பேத்துப்பாறை சரத்குமார் (வயது 30) மற்றும் விஷ்ணு (வயது 30) ஆகியோரின் உதவியுடன் கொலை அரங்கேறியுள்ளது. சம்பவ இடத்திலேயே திருப்பதி உயிரிழந்த நிலையில்., திருப்பதியின் உடலை அங்குள்ள 600 அடி பள்ளத்தில் வீசி சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை கைது செய்த நிலையில்., விஷ்ணுவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni illegal affair man killed due to illegal affair police arrest gang


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->