ஸ்கூலுக்கு நேரம் ஆகிருச்சு.. அவந்திகாவின் ஷூவில் இருந்த பேராபத்து..! பெற்றோர்களே உஷார்.!!
in theni girl shoe in snake
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள கோடாங்கிபட்டியை சார்ந்தவர் சுரேஷ். இவரது மகளின் பெயர் அவந்திகா (வயது 9). அவந்திகா அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.
அவந்திகா நேற்று ஷூவை வெளியே கழட்டிவிட்டு இருந்த நிலையில்., இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு செல்வதற்காக தயாராகி., ஷூவை அணிவதற்காக புத்தகப்பையை எடுத்து கொண்டு வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில்., பள்ளிக்கு அவசர அவசரமாக கிளம்பி ஷூவை மாட்ட முயற்சித்த நேரத்தில்., ஷூக்குள் எதோ இருப்பது போல தோன்றியுள்ளது. இத்னாயடுத்து ஷூவை உற்றுநோக்கும் போது சுருண்ட நிலையில் பாம்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவந்திகா அபயக்குரலை எழுப்பி ஷூவை கீழே போட்டு பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பாத்திரத்தில் வைத்து ஷூவை மூடி வந்துள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பாக பாம்பு பிடிக்கும் கண்ணன் என்பவருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்தவர் பாம்பை பிடித்து அங்குள்ள அய்யனார் கோவில் மலைப்பகுதியில் விட்டு சென்றார். மேலும்., பாம்பு இருப்பதை முன் கூட்டியே கவனித்தால் மாணவி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in theni girl shoe in snake