இளம்பெண்ணை நாடகக்காதல் வலையில் விழவைத்து சீரழித்த இளைஞன்.! ஒத்துழைக்கும் பெற்றோர்.!! கதறும் மாணவி.!!
IN THENI GIRL RAPPED BY HER LOVER WITH HELP OF PARENTS
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு நடைபெறும் அநீதிகள் அவருக்கு நன்கு தெரிந்த மற்றும் உடன் பழகிய நபர்களாலேயே இழைக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகேயுள்ள கே.கே.காலனி பகுதியை சார்ந்தவர் கிஷோர் பாண்டியன். இதே பகுதியில் சுமார் 19 வயதுடைய இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
கிஷோருக்கும் - சிறுமிக்கும் இடையே பள்ளி படிக்கும் சமயத்தில் இருந்தே ஏற்பட்ட பழக்கம்., பின்னாளில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில்., தற்போது சிறுமி பெங்களூரில் உள்ள கல்லூரியில் நர்சிங் பயின்று வருகிறார்.
கிஷோர் சென்னையில் இருக்கும் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்த நிலையில்., பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி., சென்னைக்கு அவ்வப்போது அழைத்து உல்லாசம் அனுபவித்துள்ளான்.
இந்த நிலையில்., பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள கூறி கிஷோர் மற்றும் அவனது குடும்பத்தாரிடம் தெரிவித்ததை அடுத்து., அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து., கிஷோர் மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்தனர்.
English Summary
IN THENI GIRL RAPPED BY HER LOVER WITH HELP OF PARENTS