திருமணம் முடித்து ஒருவாரம் ஆகலை.. போதையில் மகளை சரமாரியாக வெட்டிய தந்தை.. கண்ணீரில் புது மாப்பிள்ளை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியின் பெரிய பூலாம்பட்டி பகுதியை சார்ந்தவர் மாரியப்பன். இவர் சென்னையில் இருக்கும் தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். 

இவரது இரண்டாவது மகளின் பெயர் மின்னல்கொடி. இவரை இப்பகுதியை சார்ந்த இராமர் என்ற நபருக்கு, திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, கடந்த 12 ஆம் தேதியன்று திருமணம் செய்து வைத்துள்ளனர். 

இந்த நேரத்தில், தனது மகள் மின்னல்கொடியை அழைத்து கொண்ட மாரியப்பன், தனது மகளின் மதிப்பெண் சான்றிதழ் பேரையூரில் இருக்கும் பள்ளியில் உள்ளதாகவும், இதனை வாங்கி வர வேண்டும் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். 

இந்த நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த மாரியப்பன் தனது மகளுக்கு தெரியாமல் மது அருந்திவந்த நிலையில், இதனை மின்னல் கொடி கண்டறிந்து தந்தையை கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாரியப்பன் தான் வைத்திருந்த அரிவாளால் மகளை சரமாரியாக வெட்டியுள்ளார். சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழவே, இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு, மாரியப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆகும் பட்சத்தில் அரங்கேறிய சம்பவம் மணமகனிற்கு பெருத்த வருத்தத்தை அளித்துள்ளது.   

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni father murder attempt daughter police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->