கடைக்கு மிட்டாய் வாங்க வந்த பெண் குழந்தையை சீரழித்த காம கொடூரன்.! நேரில் கண்ட தந்தையின் கண்ணீர் துயரங்கள்.!!
in theni child girl rapped by local shop owner police investigation going on
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்த நபர்களால் வழங்கப்படுகிறது என்ற செய்தியானது பெரும் அதிர்வலையை பதிவு செய்யும் நிலையில்., பலவிதமான பிரச்சனைகளுக்கு மத்தியில் பெண்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் வசித்து வரும் காம கொடூரனின் பெயர் முனியாண்டி. இவன் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளான். இதே பகுதியில் முத்துப்பாண்டி என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். முனியாண்டியின் பெட்டிடைக்கு அதிகளவு குழந்தைகள் மிட்டாய் வாங்க வருவது வழக்கம்.
அந்த வகையில்., இவர்களின் குழந்தையும் சென்று அடிக்கடி மிட்டாய் வாங்கி வந்த நிலையில்., குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த செயலை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து அவனிடம் எச்சரித்த நிலையில்., அவன் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருப்போம் என்று எண்ணி இருந்துள்ளான்.
Tamil online news Today News in Tamil
இந்த சமயத்தில்., காம கொடூரன் குழந்தைகளை அவனது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றுள்ளான். இதனை கண்டு கொண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து முத்துபாண்டிக்கு தகவல் தெரிவிக்கவே., அதிர்ச்சியடைந்த முத்துப்பாண்டி உடனடியாக அவனது இல்லத்தின் மொட்டை மாடிக்கு சென்ற சமயத்தில் அவன் குழந்தைகளை பலாத்காரம் செய்யும் காட்சிகளை கண்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முத்துப்பாண்டி குழந்தைகளை மீட்டு காம கொடூரனை அடித்து நொறுக்கியுள்ளார். இதுமட்டுமல்லாது காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., காம கொடூரனை கைது செய்து அவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., சிறுமிகள் கடைக்கு வரும் நேரத்தில் மிட்டாய் அதிகமாக தந்து அவர்களை இல்லத்தில் அழைத்து சென்று பலாத்காரம் செய்ததும்., மிட்டாய் வேண்டாம் என்று கூறும் சிறுமிகளுக்கு குளிர்பானம் வழங்கி ஆசை காட்டி சீரழித்ததும் தெரியவந்தது. காம கொடூரனை கைது செய்த காவல் துறையினர்., அவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news
Today News in Tamil
English Summary
in theni child girl rapped by local shop owner police investigation going on