16 வயதுடைய சிறுவனை காதலித்து குழந்தையை பெற்றெடுத்த பெண்.! டிக் டாக்கில் மலர்ந்த காதலால் விபரீதம்.!! நெஞ்சடைத்துப்போன தந்தை.!! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள இணைய வாழ்க்கையில் நாம் பலவிதமான வளர்ச்சியை கண்டு வருகிறோம். அவ்வாறு நாம் கண்டு வியந்த வளர்ச்சியில் முக்கியமான மற்றும் நாம் அன்றாடம் உபயோகம் செய்ய கூடிய பொருளாக அலைபேசி இருந்து வருகிறது. அலைபேசியில் இருக்கும் செயலிகள் மூலமாக நாம் பல விதமான நண்பர்களை சந்தித்தும்., பல நேரங்களில் பல பிரச்சனைக்கு காரணமாகவும் செயல்கள் உள்ளது. 

டிக் டாக் செயலி என்னும் செயலியானது நம்மிடையே பழக்கத்திற்கு வந்த நாட்களில் இருந்து பல விதமான பிரச்சனைகள் இருந்து வருகிறது. டிக் டாக் செயலியில் பழக்கமான நபர்களை நம்பி பலர் இளம் வயதிலேயே தங்களின் வாழ்க்கையை இழந்தும் இருக்கின்றனர். இந்த நிலையில்., டிக் டாக் செயலியில் பழக்கமான பெண்ணுடன் பழகிய 16 வயது மாணவன் தந்தையாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

tictok

தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் வசித்து வரும் 16 வயதுடைய மாணவன்., சென்னையில் இருக்கும் தொழிற்பயிற்சி பள்ளியில் பயிட்னர் வந்துள்ளான். மாணவனின் தந்தை துபாயில் பணியாற்றி வந்த நிலையில்., அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். மாணவன் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி பயின்று வந்த நிலையில்., டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளான். 

Tamil online news Today News in Tamil

இந்த நேரத்தில்., மாணவனின் விடியோவை கண்ட செயலி பயன்பாட்டாளர்கள்., மாணவனை பின்தொடர்ந்து அவனது வீடியோவிற்கு லைக்குகளை வாரி வழங்கி வந்துள்ளனர். இந்த நிலையில்., சிறுவன் கடந்த அக்டோபர் மாதத்தில் மாயமாகியுள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

uthukuli, uthukuli railway station

இந்த விசாரணையில்., கடந்த 10 மாதங்களாக எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில்., மாணவனின் தந்தை காத்திருந்து ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இதனையடுத்து சிறுவனின் அலைபேசி ஐஎம்இஐ எண்ணை வைத்து சோதனை செய்ததில்., மாணவன் ஊத்துக்குளியில் இருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியாக விஷயம் நிகழ்ந்துள்ளது. சிறுவனுக்கு டிக் டாக் செயலி மூலமாக பழக்கமாகிய நர்ஸ் பெண்ணை திருமணம் செய்து., இவர்கள் இருவருக்கும் புதியதாக பிறந்த 40 நாட்கள் குழந்தை இருந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து காதல் ஜோடியை மீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது மாணவனின் தந்தைக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni boy married tic tok love girl police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->