8 இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கொடூரன்.. தீவிர விசாரணையில் காவல் துறையினர்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!
in thanjavur youngster cheated girls 8 marriage police investigation going on
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு கீழையூரில் இருக்கும் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவரது மகனின் பெயர் சந்தோஷ் (வயது 23). இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னதாக கருவிழிக்காடு கிராமத்தை சார்ந்த சத்யா (வயது 20) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில்., இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பின்னர் திருப்பூரில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்த சமயத்தில்., பணிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த சந்தோஷ் மீண்டும் வெளியே சென்ற நிலையில்., கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா தனது கணவரை பல இடங்களில் தேடி அலைந்துள்ளார்.
சந்தோஷை அவருக்கு தெரிந்த இடங்களில் தேடியும் காணவில்லை என்பதால் அங்குள்ள திருப்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருந்தார். இது தொடர்பான புகார் மனுவை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில்., மாயமான சந்தோஷ் திருப்பூரை சார்ந்த சசிகலா (வயது 19) என்ற இளம்பெண்ணை காதலித்து ஒக்கநாடு கீழையூரில் வசித்து வருவதாக சத்யாவிற்கு தகவல் வந்துள்ளது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த சத்யா ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
இவரது புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் சசிகலாவிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சசிகலாவை திருமணம் செய்து கொண்டது உறுதியானதை அடுத்து., சந்தோஷை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இது தொடர்பாக சந்தோஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்.,
இதேபோன்று 8 இளம்பெண்களை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதும்., சந்தோஷ் இளம்பெண்களிடம் பேசி., அவர்களை தனது நாடக காதலால் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டு சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு., பின்னர் பெண்களிடம் கூறாமலேயே சென்றுவிட்டு மற்றொரு திருமணம் செய்துகொள்வதுமாக இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thanjavur youngster cheated girls 8 marriage police investigation going on