காதல் திருமண மனைவிக்கு துரோகம்?.. நிறைமாத கர்ப்பிணியின் விபரீத முடிவு.. தஞ்சாவூரில் பெரும் சோகம்.!!
in thanjavur pregnant lady attempt suicide died due to husband illegal affair
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குருங்குளம் காலனித் தெருபகுதியை சார்ந்தவர் சந்திரபோஸ். இவரது மகளின் பெயர் சந்திரலேகா (வயது 21). இதே தெரு பகுதியில் வசித்து வந்தனர் முருகேசன். இவரது மகனின் பெயர் ராஜா கண்ணு (வயது 37). ராஜா கண்ணு விவசாய கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், சந்திரலேகாவிற்கும் - ராஜாக்கண்ணிற்கும் இடையே ஏற்பட்ட நட்பு ரீதியிலான பழக்கம் பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக திருச்சி சமயபுரம் கோவிலில் இரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து சந்திரலேகா ராஜாக்கண்ணுவின் இல்லத்தில் வசித்து வந்துள்ளனர்.
தற்போது சந்திரலேகா 7 மாத கர்ப்பிணியாக இருந்து வரும் நிலையில், நேற்று ராஜாக்கண்ணுவின் இல்லத்தில் இருந்த சந்திரலேகா விஷம் குடித்துள்ளார். வீட்டில் மயக்க நிலையில் நுரைதள்ளியிருந்த இவரை கண்ட அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்திரலேகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சந்திரலேகாவின் உடலை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், மகளின் இறப்பு செய்தியை அறிந்த பெற்றோர்கள் கதறியழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும், சந்திரலேகாவின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில், ராஜாக்கண்ணுவிற்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை தனது மகள் கண்டித்த சமயத்தில் இத்துயரம் அரங்கேறியுள்ளது என்றும், எனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thanjavur pregnant lady attempt suicide died due to husband illegal affair