ஹீட்டர் உபயோகம் செய்பவர்களே கவனம்... அறைக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்த காவல் அதிகாரி..!!
in thanjavur police died due to electric shock
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சுப்பிரமணியர் கோவில் பகுதியை சார்ந்தவர் தருமர். இவரது மகனின் பெயர் காளிமுத்து (வயது 27). இவர் கடந்த 2018 ஆம் வருடத்தில் காவல் துறையில் இணைந்துள்ள நிலையில், மதுரையில் பயிற்சியை நிறைவு செய்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2019 ஆம் வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் தஞ்சாவூர் ஆயுதப்படையில் பணியாற்றிய நிலையில், தஞ்சாவூர் மணிமண்டபம் காவலர் குடியிருப்பில் தங்கியிருந்து பணியாற்றி வந்த காளிமுத்து, கணினி இயக்குபவராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த சமயத்தில், காலை குளிப்பதற்கு நேற்று வாளியில் தண்ணீரை நிரப்பிவிட்டு, எலக்ட்ரிக் ஹீட்டர் மூலமாக வெந்நீரை தயார் செய்துள்ளார். இந்த நேரத்தில் எலக்ட்ரிக் ஹீட்டரின் கீழ் புறத்தில் எதிர்பாராத கை பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனால் காளிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான நிலையில், காலையில் நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு சந்தேகித்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
இந்த நேரத்தில் பெரும் அதிர்ச்சியாக காளிமுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thanjavur police died due to electric shock