மகள்களின் கண்முன்னேயே தாயை கொடூர கொலை செய்த கொடூரன்.. தஞ்சையில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த பெண்மணியின் பெயர் வனிதா. இவர் தனது இரண்டு குழந்தைகளோடு வசித்து வந்த நிலையில்., கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னதாக கணவரை இழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கனகராஜ் என்ற நபருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த சமயத்தில்., குடும்ப தேவைகளுக்காக உறவினர் பிரகாஷ் என்பவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக ரூ.2 இலட்சம் கடன் வாங்கிய நிலையில்., தற்போது வரை ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். மேலும்., மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். 

இதனால் வனிதாவுக்கும் - பிரகாஷிற்கும் இடையே தகராறு இருந்து வந்த நிலையில்., இது தொடர்பாக காவல் நிலையத்திலும் வனிதா புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில்., பிரகாஷ் சம்பவத்தன்று தனது காதலி மற்றும் நண்பருடன் வந்து சண்டையிட்டுள்ளார்.

இதனையடுத்து பிரகாஷ் மற்றும் அவரின் நண்பர் சூர்யா குழந்தைகள் கண்முன்னே தாயாரை வெட்டி கொலை செய்து சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளது. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்து., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வனிதா மற்றும் வனிதாவின் நண்பர் கனகராஜ் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசனரை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thanjavur mother killed police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->