வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க வருவது போல பழைய பகை தீர்த்த கும்பல்?.. கும்பகோணத்தில் கொடூர கொலை..!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மேலக்காவேரி பகுதியை சார்ந்தவர் ராமநாதன் (வயது 65). இவர் தொழிலதிபராக இருக்கும் நிலையில், எண்ணெய் கடைகளை அதிகளவு வைத்திருக்கிறார். இவரது மனைவியின் பெயர் விஜயா. இவரது மகளின் பெயர் சரண்யா. இவருக்கு திருமணம் முடிந்து கோவிந்தராஜ் என்ற கணவர் இருக்கிறார். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதியன்று கணவருடன் உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்கு சரண்யா சென்றுள்ளார். இதனை அறிந்த கொள்ளைக்கூட்டம், இரவு நேரத்தில் இரண்டு பேர் முதலில் வந்து கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்த நேரத்தில் தாம்பூல தட்டுடன் நின்று, ஐயாவிற்கு பத்திரிகை வைக்க வந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த நபர்கள் ராமநாதனின் மனைவியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

இவர் தண்ணீரை எடுக்க சென்ற நிலையில், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்த ராமநாதன், வந்திருந்த மூன்று மர்ம நபர்களை விசாரித்துக்கொண்டு இருந்த நீலயில், தொலைக்காட்சி சத்தத்தை அதிகளவு வைத்து ராமநாதனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். தண்ணீர் எடுத்து வந்த விஜயா கணவரை மர்ம நபர்கள் தாக்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். 

மேலும், மர்ம நபர்கள் விஜயாவை தாக்கிய நிலையில், தனது கணவரை விட்டுவிடும் படி கெஞ்சியுள்ளார். இதனை அவரை அங்குள்ள அறைக்குள் அடைத்துவிட்டு, ராமநாதனை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த 60 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு, மிளகாய்ப்பொடியை தூவிவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 

விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதால், வந்திருந்த கும்பலில் ஒருவன் நான்கு நாட்களுக்கு முன்னதாக பத்திரிக்கை வைப்பதாக கூறி, ராமநாதன் இங்கு இல்லை என்பதை அறிந்து சென்றுள்ளான். 

இந்த நிலையில் தான் நான்கு நாட்கள் கடந்த பின்னர் வீட்டிற்கு வைத்து கொலையை அரங்கேற்றியுள்ளதும், இவனுக்கு எல்லா விஷயமும் தெரியும்.. இவனை கொலை செய்ய வேண்டும் என்ற வெறியுடன் கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர் மற்றொரு பிரச்சனைக்கு கொலை செய்யப்பட்டு, திருட்டு பிரச்சனையால் அரங்கேறிய கொலை போல சித்தரித்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Thanjavur man murder police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->