கள்ளக்காதல் விவகாரத்தால் மர்ம உறுப்பை துண்டித்து கொலை செய்த மர்ம நபர்கள்..! விசாரணையில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தை சார்ந்தவர் சித்தார்த்தன் (வயது 55). இவர் விவசாய கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் மாலதி. இவர்கள் இருவருக்கும் விவேக் மற்றும் மதன் குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலயில்., சித்தார்த்தன் 100 நாள் பணிக்கு சென்று வந்துள்ளார். 

thanjavur, thanjavur railway station, thanjavur railway station,

சித்தர்தானின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்த நிலையில்., இவர்களின் இரண்டு மகன்களும் வெளியூரில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த சமயத்தில்., நேற்று 100 நாள் பணிக்கு செல்லாமல் இருந்த சித்தார்தனை., அவருடன் பணியாற்றும் சக தோழர்கள் வீட்டிற்கு வந்து பார்க்க வந்துள்ளனர். இந்த சமயத்தில்., சித்தார்த்தன் வீட்டில் பிணமாக கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

பின்னர் இது குறித்து அக்கம் பக்கத்து மக்களுக்கு தெரிவித்த நிலையில்., இவர் இயற்கையாக இறந்துவிட்டார் என்று எண்ணி இவரின் உடலை அடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இந்த நேரத்தில்., இறந்தவரின் இறுதி சடங்கு நடைபெறும் நேரத்தில் சித்தர்தானின் உடலை குளிக்க வைக்கும் நேரத்தில் உடல் முழுவதும் இரத்த காயத்துடனும்., சித்தார்தனின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

illegal affair, couple enjoy, enjoy with partner, husband wife enjoy,

இதனை கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து சித்தார்தனை யாரேனும் கொலை செய்திருக்க வேண்டும் என்று எண்ணி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., சித்தார்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்., சித்தார்தனின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால்., சித்தார்தனுக்கு கள்ளத்தொடர்பு ஏதேனும் இருந்திருக்கலாம் என்றும்., இந்த கள்ளக்காதல் விவகாரத்தால் சித்தார்த்தன் கொலை செய்யப்பட்டு., மர்ம உறுப்பும் துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thanjavur man murder due to illegal affair police investigation going on


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->