மாத்திரை போட்டு அவசரத்தில் ஆசிட்டை குடித்த பாட்டி பரிதாப பலி..! பெற்றோரை குழந்தையாக கொஞ்சம் கவனியுங்கள்.!!
in thanjavur grand ma died due drink acid
நமது இல்லங்களில் அல்லது நாம் பணியாற்றி வரும் கடைகளில் சில உபயோகத்திற்க்காக ஆசிட் மற்றும் பிற எண்ணெய் பொருட்களை வாங்கி வைத்திருப்பது வழக்கம். இல்லங்களை பொறுத்த வரையில் ஆசிட்., லைஸால் மற்றும் துணி துவைக்க பயன்படும் நீர்க்கலவைகள் போன்ற பொருட்கள் இருக்கும்.
இவ்வாறாக வைத்திருக்கும் பொருட்களை நாம் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் நமது இல்லங்களில் இருக்கும் சிறுவயதான குழந்தைகள் மற்றும் வயது அதிகமாக உள்ள நபர்கள் தண்ணீர் என்று நினைத்து குடித்துவிடும் சோகம் ஏற்படும்.
நாம் அஜாக்கிரதையாக இருக்கும் பட்சத்தில் சில சமயம் குழந்தைகள் அல்லது வயதான நபர்கள் தண்ணீர் என நினைத்து ஆசிட் போன்ற பொருட்களை குடித்து உயிரிழப்பது போன்ற செய்தியை நாம் படித்திருப்போம். இந்த நிலையில்., இதனைப்போன்ற துயரம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகேயுள்ள பழைய அரண்மனை தெரு பகுதியை சார்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவியின் பெயர் சந்திரா (வயது 75). இவர் வயிற்று வலியின் காரணமாக அவதியுற்று வந்த நிலையில்., இதற்க்காக மாத்திரைகள் எடுத்து கொள்வர்.
இந்நிலையில்., சம்பவத்தன்று வழக்கம் போல வயிற்று வலிக்கா மாத்திரையை சாப்பிட்டு., தண்ணீர் என்று நினைத்து அருகில் இருந்த ஆசிட்டை குடித்துள்ளார். இதனால் சந்திராவின் தொண்டை முழுவதும் பாதிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thanjavur grand ma died due drink acid