தஞ்சாவூரில், தாயாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த 18 வயது மகளின் பகீர் வாக்குமூலம்..!! அதிர்ச்சியில் காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் திருவையாறு அருகேயுள்ள விளாங்குடி கிராமத்தை சார்ந்தவர் அறிவழகன். இவரது மனைவியின் பெயர் மகேஸ்வரி (வயது 40). இவர்கள் இருவருக்கும் அனுசுயா என்ற 17 வயது குழந்தை உட்பட., மூன்று குழந்தைகள் உள்ளனர். அனுசுயா அங்குள்ள திருமனுர் பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்த நிலையில்., கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக அறிவழகன் இறந்துவிட்ட நிலையில்., மகேஸ்வரி கூலித் தொழிலாளியாக பணியாற்றி குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்த சமயத்தில்., இதே கிராமத்தை சார்ந்த ஆனந்தராஜ் (வயது 26) என்பவருக்கும் - அனுசியாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதை அடுத்து., இது காதலாக மாறியுள்ளது. 

இருவரும் காதலித்து வந்த நிலையில்., இவர்களின் காதலிற்கு தாயார் மகேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்த நிலையில்., தனது காதலை கைவிடாது அனுசுயா இருந்து வந்துள்ளார். இந்த தருணத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அணுகிய திடீரென மாயமாகவே., இது குறித்து தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையின் போதே அனுசுயா மீண்டும் வீட்டிற்கு வந்த நிலையில்., காதலை தள்ளிவைத்து படிப்பில் கவனம் செலுத்த கூறி தாயார் பல முறை முறையிட்டு வந்த காரணத்தால்., இருவருக்கும் இடையே அடிஅக்டி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த விஷயம் குறித்து அனுசுயா தனது காதலனிடம் தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் காதலன் கூறிய ஆலோசனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை கேட்ட காதலன் "உன் தாயார் உயிருடன் இருக்கும் வரை காதலிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பார்., அவரை தீர்த்துக்கட்டி விடலாம்" என்று கூறியுள்ளான். இவர்களின் திட்டப்படி நேற்று வழக்கம் போல இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில்., அனுசுயா தனது தாயாரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மகேஸ்வரி துடிதுடித்து உயிரிழந்துள்ளார். 

இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய நிலையில்., அனுசியாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து விசாரணை மேற்கொண்டு காதலன் ஆனந்த ராஜையும் கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thanjavur girl killed her mother due to love problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->