அறையெடுத்து கொண்டாட்டத்தில் காதல் ஜோடி.! இறுதியில் அரங்கேறிய சோகம்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழ திருப்பந்துருத்தி காட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தவர் கோபால். இவரது மகளின் பெயர் வலங்கை தேவி (வயது 28). அதே போன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி சித்தமல்லி பகுதியை சார்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகனின் பெயர் செந்தமிழ். வலங்கை தேவியும்., செந்தமிழும் கடந்த 3 ம் தேதியன்று வேளாங்கன்னிக்கு சுற்றுலா வந்த நிலையில்., அங்குள்ள விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளனர். 

இவர்கள் இருவரும் தங்கியிருந்த அறையை காலி செய்ய சொல்வதற்கு விடுதியின் மேலாளர் இவர்களின் அறைக்கு சென்று நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளார். கதவு உள்தாழிட்டு இருப்பதை அறிந்த இவர் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால்., சந்தேகமடைந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது., வலங்கை தேவி மின் விசிறியில் பிணமாக தொங்கியுள்ளார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் செய்வதறியாது திகைக்கவே., உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிந்தார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., தூக்கில் பிணமாக தொங்கிய வலங்கை தேவியை மீட்டு அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் அந்த அறையில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில்., வலங்கை தேவி அவசர ஊர்தியில் உதவியாளராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இந்நிலையில்., இவருடன் வந்திந்த செந்தமிழ் குறித்து எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thanjavur girl attempt suicide when hotel enjoy with her boy friend


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->