காவல்துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த இருட்டு உண்மைகள்..!! தஞ்சாவூர் திருட்டு கும்பலின் கொடூரங்கள்..!
in thanjavur culprit team sexual harassment college students
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் அருகே இருக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வந்தது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் கணவன் - மனைவி., காதல் ஜோடிகள் ஆகியோர் வழிப்பறி சம்பவங்கள் காரணமாக அதிகளவு பாதிக்கப்பட்டு வந்தனர்.
இது குறித்து புகார் காவல்துறையினருக்கு கிடைத்த வண்ணம் இருக்க., கொள்ளையர்களை பிடிப்பதும் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. இதனை தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்கள் மற்றும் குற்ற சம்பவங்களும் அதிகரித்ததால் இதுகுறித்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சமயத்தில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தஞ்சாவூர் பகுதியில் இருக்கும் பொறியாளர் கெல்வின் என்பவர் வல்லம் பகுதியில் வந்து கொண்டு இருந்த போது சுமார் 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அவரது தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும்., வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில்., அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில்., காவல் துறையினருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் பெரும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மனோஜிபட்டியை சார்ந்த முத்துச்சாமி என்பவரின் மகன் ரமேஷ் (வயது 27) என்பதும்., தஞ்சாவூர் மற்றும் வல்லம் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக கொள்ளையில் ஈடுபட்ட வந்த கொள்ளை கூட்டத்தின் தலைவன் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து இவனிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில்., தஞ்சாவூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவிகள் அவரது அவர்களின் காதலனை அழைத்து கொண்டு குறித்த பகுதிக்குச் சென்று உல்லாசமாக இருக்கும்போது., ரமேஷ் மற்றும் கூட்டாளிகள் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
மேலும்., இதனைப்போன்று தன்மையில் வரும் காதல் ஜோடிகள் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும்., அவர்களை தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளை அடித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்., இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thanjavur culprit team sexual harassment college students