சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய நாடககாதலன்..! காவல் நிலையத்தில் கண்ணீருடன் சிறுமி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை அடுத்துள்ள உடையாளூர் பகுதியில் 16 வயதுடைய சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்த நிலையில், இப்பகுதியை சார்ந்த செந்தில் (வயது 28) என்பவன் சிறுமியிடம் பழகியுள்ளான். துவக்கத்தில் நட்பாக பழகிய காமுகன், பின்னர் சிறுமியை நாடககாதலால் ஏமாற்றியுள்ளான். பின்னர் சிறுமியிடம் நெருங்கி பழக துவங்கியுள்ளான்.

இதனால் தற்போது சிறுமி கர்ப்பமாக இருக்கும் நிலையில், இது குறித்து செந்திலிடம் சிறுமி தெரிவித்து திருமணம் செய்ய கூறி வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்க மறுத்த காமுகன், சிறுமியிடம் பேசாமல் மறுத்து வந்துள்ளான். 

தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்த சிறுமி, இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவே, இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு செந்திலை கைது செய்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Thanjavur child sexual abuse by drama lover police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->