மகளை சீரழித்து எய்ட்ஸ் நோயிக்கு உள்ளாக்கிய காமுக தந்தை.! தஞ்சை நீதிபதி பரபரப்பு தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் பகுதியை சார்ந்தவர் குமார் (வயது 37). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் இறந்துவிட்ட சமயத்தில்., இவர் தனது 10 வயதாகும் மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில்., சிறுமி அங்குள்ள பள்ளியில் பயின்று வந்த நேரத்தில்., சிறுமியின் செயல்பாடுகளில் உள்ள மாற்றத்தை ஆசிரியர்கள் கண்டறிந்து விசாரித்த நேரத்தில்., சிறுமியின் தந்தை மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் தெரியவந்துள்ளது. 

child sexual abuse, child sexual harassment,

மது போதையில் சிறுமியை ஒருவருடத்திற்கும் மேலாக சீரழித்து வந்த நிலையில்., இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ள நிலையில்., இது தொடர்பாக பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நேரத்தில் சிறுமி காப்பகத்தில் இருந்த தருணத்தில் மயக்கமடையவே., சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்து எய்ட்ஸ் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமியின் தந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு எய்ட்ஸ் இருந்தது கண்டறியப்பட்டது. 

HIV, AIDs,

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2017 ஆம் வருடத்தில் அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இவ்வழக்கின் விசாரணை தற்போது நிறைவு பெற்று தீர்ப்பு வந்துள்ளது. 

இந்த வழக்கில் குற்றவாளியான சிறுமியின் தந்தை குமாருக்கு நான்கு 4 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4500 அபராதமும் விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 இலட்சம் நிதிஉதவி மற்றும் உயர்தர சிகிச்சை அளிப்பதற்கும் தமிழக அரசிற்கு பரிந்துரை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thanjavur child rapped by father court judgment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->