குடும்பத்தோடு திட்டம் போட்டு திருட்டு.. கைதான கும்பலிடம் பகீர் வாக்குமூலம்.. தென்காசியில் திகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளையானது நடைபெற்று வந்தது. இது குறித்த தொடர் புகரானது தென்காசி சுற்றுவட்டார காவல் நிலையத்தில் கிடைக்கப்பெற்று வந்துள்ளது. 

இதனையடுத்து இது குறித்த வழக்குப்பதிவை ஏற்ற காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில்., தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கடந்த ஐந்து வருடங்களாக தேடி வந்தனர். 

இன்று பிற்பகல் நேரத்தில் காவல் துறையினர் மேற்கொண்ட வழக்கமான சோதனையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கட்டாயம் பகுதியை சார்ந்த முருகன் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

thief, thief seithipunal,

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர் தென்காசி மற்றும் இதனைச்சுற்றியுள்ள பகுதிகள் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தெரியவந்துள்ளது. மேலும்., கடந்த 5 வருடங்களாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 

இவர்களிடம் இருந்து தற்போது 3 கிலோ தங்கத்தினை கைப்பற்றிய நிலையில்., இவர்கள் நால்வரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பான தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பலநாள் திருடன் ஒரு நாள் அகப்பட்ட கதையாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tenkasi thief gang arrest by police investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->