14 வயது சிறுமியை கடத்தி கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த கொடூரம்.! தென்காசியில் பெரும் சோகம்.!!
in tenkasi girl sexual harassment by gang police arrest culprit
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகேயுள்ள சோலைசேரி வேதகோவில் தெரு பகுதியை சார்ந்தவன் முத்துவேல். இவனது நண்பனின் பெயர்கள் முருகன்., கருப்பசாமி மற்றும் சிலம்பரசன். இவர்கள் நன்கு பேரும் நேற்று 12 மணியளவில் ஊருக்கு வெளியே இருக்கும் வயல்வெளி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இந்த நேரத்தில் வழியில் 14 வயதுடைய சிறுமி தனியாக சென்று கொண்டு இருந்த நிலையில்., சிறுமியை அழைத்த காம கொடூரன்கள் சிறுமியிடம் எங்கு செல்கிறாய்? என்று விசாரித்துள்ளனர். இவனது பேச்சில் உள்ள விபரீதத்தை அறியாத சிறுமி தனது தாயாரை தேடி செல்வதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியை அவரது தாயாரிடம் அழைத்து சென்று விடுவதாக காம கொடூரன்கள் கூறியுள்ளனர். விபரீதத்தை அறியாத பச்சிளம் சிறுமி, இவர்களுடன் செல்ல இரு சக்கர வாகனத்தில் சென்ற நிலையில்., சிறுமியை அங்குள்ள மலைப்பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர்.
சிறுமியை மலைப்பகுதியில் வைத்து கூட்டுப்பலியால் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நிலையில்., சிறுமி இவன்களின் கொடூரத்தை தாங்கி இயலாது கதறி துடித்துள்ளர். சிறுமியின் அலறலை பொறுப்பேற்காத கொடூரன்கள்., சிறுமியை சீரழித்துவிட்டு அங்குள்ள சாலையில் கொண்டு சென்று விட்டு தப்பியோடியுள்ளனர்.
நிற்க கூட தெம்பு இல்லாமல் சிறுமி அழுதவாறு சாலையில் இருந்த நிலையில்., மகளை காணாது தேடியலைந்த பெற்றோருக்கு அதிர்ச்சியாக சிறுமி சாலையில் அழுது கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்த சமயத்தில் விபரீதம் புரிந்துள்ளது.
பின்னர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து., சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை நாலு பேர் சேர்ந்து கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முத்துவேல்., கருப்பசாமி., சிலம்பரசனை கைது செய்த நிலையில்., தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in tenkasi girl sexual harassment by gang police arrest culprit