கழுத்தை நெரித்து நெஞ்சை உலுக்கிய கடன் தொல்லை.. குடும்பத்தோடு எடுத்த விபரீத முடிவு..!!
in tenkasi family members attempt suicide
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் அருகே இருக்கும் ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள ஆம்பூர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 52). இவர் கடைகளுக்கு சென்று மிட்டாய் விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மனைவியின் பெயர் லட்சுமி (வயது 47). இவர் பொட்டல் புதூர் பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஜோதி என்ற மகளும், ஆரோக்கிய ஸ்ரீதர் என்ற மகனும் உள்ள நிலையில், ஜோதி அங்கு உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.
ஆரோக்கிய ஸ்ரீதர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக சந்தானம் வி.கே.புரம் பகுதியில் இருக்கும் சந்தன மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
தற்போது கீழ ஆம்பூரில் புதியதாக வீடு கட்டி குடும்பத்துடன் அனைவரும் குடியேறியுள்ளனர். இவர்களுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிய வருகிறது.
மேலும், ஆரோக்கிய ஸ்ரீதருக்கு இணைய வர்த்தகத்தின் மூலமாக பங்குகளை வாங்கி முதலீடு செய்ததில், பெரும் கடன் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இவர்கள் தங்களின் இல்லத்தில் இருந்த நிலையில், வீட்டிலிருந்த சந்தானம், லட்சுமி மற்றும் ஆரோக்கிய ஸ்ரீதர் ஆகிய 3 பேரும் அதிகாலையில் விஷம் குடித்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.
இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான ஜோதி அலறவே, இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் நிலைமையை புரிந்து அனைவரையும் மீட்டு அங்குள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் அனுமதி செய்தனர்.
இவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சந்தனமும், காலையில் லட்சுமியும் துஆடுது பரிதாபமாக உயிரிழந்தனர். ஆரோக்கிய ஸ்ரீதர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in tenkasi family members attempt suicide