வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கிடைத்த மழை மீண்டும் கிடைக்குமா?.. வானிலை மையத்தின் அறிவிப்பு.!!
in tamilnadu have rain weather report announced
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களை போல தென் மாவட்டங்கள்., காவிரி டெல்டா பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் அதிகளவு மழையானது பெய்து வருகிறது.
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்தளவு காற்றழுத்த தாழ்வு நிலையின் கர்ணாம்க தொடர்ந்து மழை பெய்து வந்ததன் எதிரொலியாக மேட்டூர் அணையானது நிரம்பியது.
இதுமட்டுமல்லாது தமிழகத்தின் ஏரி மற்றும் குளங்கள் அடுத்தடுத்து நிரம்பி வரும் நிலையில்., வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் 2 நாட்களுக்கு பரவலான மழை கிடைத்துள்ளது. மேலும்., சென்னை உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. சென்னையில் வடபழனி., கிண்டி., பாரிமுனை., மாதவரம்., புழல்., பூந்தமல்லி., ஆவடி., குன்றத்தூர் மற்றும் பல்லாவரம் பகுதியில் மழை பெய்தது.
இதனைப்போன்று காஞ்சிபுரம்., திருவள்ளூர்., வேலூர்., திருவண்ணாமலை., நாகப்பட்டினம்., திருவாரூர்., அரியலூர் மற்றும் விருதுநகர் போன்ற மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்., செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.
நேற்றைய தினத்தில் 4 செ.மீ மழை பெய்து வந்த நிலையில்., வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சி மேகத்தின் விளைவாக அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் நல்ல மழை அவ்வப்போது கிடைக்கிறது. இம்மழை இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்றாலும்., கனமழைக்கான வாய்ப்பில்லை. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும்., மூன்று நாட்களுக்கு பின்னர் தென் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in tamilnadu have rain weather report announced