தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கரோனா உறுதி... அதிரடியாக உயர்ந்த எண்ணிக்கை.. பீலா ராஜேஷ் பரபரப்பு பேட்டி.!!
in tamilnadu corona virus positive
தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நேற்று வரை 485 ஆக இருந்த நிலையில், தற்போது வரை 4 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று வரை 485 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், மேலும் 86 பேருக்கு தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையானது 571 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலானோர் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய நபர்களாக இருந்த நிலையில், தமிழக அரசு தேவையான அணைத்து நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், 8 பேர் இன்றுடன் பூரண நலமடைந்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் அல்லது அறிகுறி உள்ள நபர்கள் தயவு செய்து மருத்துவமனைக்கு துவக்கத்திலேயே வரவேண்டும். இறுதி சூழ்நிலையில் வந்தால் யாராலும் நடப்பதை தடுக்க இயலாது.
அரசின் அறிவுறுத்தலின்படி மருத்துவ உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. டெல்லி மாநாட்டிற்கு சென்ற நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து மருத்துவமனையில் வந்து சோதனை செய்து கொள்ளுங்கள். இன்று உறுதியாகியுள்ள 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த நபர்கள் ஆவார்கள்.
Tamil online news Today News in Tamil
English Summary
in tamilnadu corona virus positive